Quantcast
Channel: story of srirangam
Viewing all 19 articles
Browse latest View live

Story of Srirangam - part- 01 - 1200 AD

$
0
0


                                      போஜீஸ்வரா கோவில் சமயபுரம் 
பாகம் - 01 


எனது நண்பர் ரெங்கநாதன் (Hindu reporter karur)அவர்தம் 
 ஆசிரியர் எழுதிய " ரெங்கராட்டினம்" என்கிற ஒரு புத்தகத்தை 
பற்றி கூறி ... அதன் சாராம்சத்தை பற்றியும் சொன்னார்.. 

வீர நரசிம்மா II (1220–1235),ஹொய்சள ராஜா, கர்நாடகாவை 
ஆண்டு வந்த காலத்தில் ஒரு பெரும் தங்கப் புதையல் கிடைத்திட்டது
.அவனது அரசபையில் இருந்த மந்திரி ஒருவர், இந்த தங்கம் தோஷம்
உள்ளதாக காணப்படுகிறது, எனவே இதை நாம் கைகொள்ள வேண்டாம்
என்று தடுத்துக் கூறினார்...

இந்த தங்கத்தை கைக்கொள்ளும் எவருக்கும் கடுமையான சோதனைகள்
ஏற்ப்படும் என்றும் எச்சரித்து, அதை தடை செய்ய எத்தனித்தார்... அரசன்
அவரை மறுத்து ... சிறை கொண்டான்.

தமிழக அரசியல் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன ... சோழ பாண்டிய சண்டைகள் உச்சத்தை அடைந்தன... மூன்றாம் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் பாண்டியர்கள் கை ஓங்கி சோழர்கள் ஆளுமை மங்கத்துடங்கியது ...
இரண்டாம் வீர நரசிம்மன் தனது மருமனான மூன்றாம் ராஜராஜ சோழனுக்காக தமிழகத்தில், ஸ்ரீரங்ககத்துக்கு அருகில் கண்ணனூர் குப்பம் (இன்றய சமயபுரம் ) என்கிற ஊரை தன இரண்டாம் தலைநகராக கொண்டு ஒரு சிவாலயம் (அதன் தற்போதைய படம் இணைக்கப்பட்டுள்ளது ) கட்டுவித்து பொன் கூரை வெய்து (மேற சொன்ன குறை உடைய பொன் புதையலை சேமித்து வைத்து ஆண்டு வந்தான்..
இந்த கால கட்டத்தில் சுந்தர பாண்டியன் சோழ அரசனை வென்று அவனை சிறை பிடித்து சென்றான் .... அதனுடன் இக் கோவில் போகிஷங்களையும் கவர்ந்து சென்றான் ...
சுந்தர பாண்டியன் கவர்ந்து சென்ற இந்த தங்கத்தை திருவரங்கத்து அரங்கனுக்கு அளித்திட முடிவு செய்து, அன்றைய தின அதிகாரிகளை மற்றும் ஆச்சார்யர்களை அணுகினான் ..

இதனிடையில் ,ஹொய்சள ராஜாவால் கைது செய்யப்பட்ட மந்திரியின் புதல்வி ஸ்ரீரங்கம் சென்று இந்த தோஷம உள்ள தங்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று அனைவருக்கு வேண்டுகோள் விடுத்தாள்... பல டன் எடை உடைய அந்த தங்கத்தை ஸ்ரீரங்க வாசிகள் தம்மை ஆளும் பாண்டிய ராஜாவிடம் இருந்து பெற மறுத்தனர் .(ஒரு நூறு ரூபாய் இன்று கோவிலில் என்ன மரியாதையை பெற்றுத்தரும் என அனைவரும் அறிவீர் ) மன்னன இரண்டு ஆண்டுகள் பல வழிகளில் போராடி .. அரங்கனுக்கு பொன் கூரை வேயவும், மற்றும் சந்துனு மண்டப சுவர்களில் அலங்கரிக்கவும் ஒப்புக்கொண்டார்கள் .. (பொன் வெய்த பாண்டியன் , மதுரைய மீட்ட சுந்தர பாண்டியன் இவனே )
அரங்கன் ஏன் இந்த தோஷமுள்ள தங்கத்தை பெற்றான் என்பதை வரும் நாட்களில் பார்ப்போம் ...
 

Story of Srirangam part - 02 (in English and Tamil )

$
0
0








முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்,இவ்வாறாக அரங்கனுக்கு பொருள் சேர்த்த விதத்தை விளக்கும் பக்கங்களில், அவன் கண்ணனூர் குப்பத்தை கைபற்றிஅங்கிருந்து பல போகிஷங்களை மற்றும் யானை குதிரை முதலியவற்றை எடுத்து சென்றதை கூறுகிறது ... மற்றும் அப்போது அங்கு ஆண்டு வந்த ஹோய்சலா மன்னன், இரண்டாம் வீர நரசிம்மா மகனான வீர சோமேஸ்வரரனை கொன்று அனைத்தையும் தன வசமாகியதாக முடிகிறது... இதில் வீர சோமேஸ்வரன், (1235–1254) ஸ்ரீரங்கத்துக்கு அருகில் தற்போதைய பெரியார் நகர அருகில் உள்ள வீரேஸ்வரம் என்கிற கிராமத்தையும், வயலூர் செல்லும் வழியில் உள்ள சோமரசம்பேட்டை என்கிற கிராமத்தையும் உருவாக்கினான் ...அதை பற்றிய குறிப்பு சிவன் கோவிலில் காட்டப்பட்டுள்ளது ...
(மூன்று தெருக்களாக இன்று ஸ்ரீரங்கத்தில் உள்ள வீரேஸ்வரம் 1250 AD இல உருவாக்கப்பட்ட ஒரு கிராமம் என்று அறிவது ஆச்சர்யமான செய்தியே )

some of friends wants a english translation for the above

Sadayavarman Sundara Pandyan I, invaded Hoysala dominions along the river kaveri and captured the fortress of Kannanur Koppam great amount of loot was captured along with many horses,elephants A later attempt by Someshwara to invade Pandyan kingdom ended in his defeat and death..

The place which is now near Periyaar nagar called Veereshwaram and somarasam pettai on the road to vayalure were the villages created by Vira Someshwara according to some stone inscriptions ..(which is now placed in a board ...)
it is amazing to know that ...having just three streets now on the way near mambalasalai ... veereshwaram .. smallest nagar in srirangam was created in 1250 and still surviving ...
 

story of srirangam part - 03(English version at the bottom)

$
0
0
பாகம் - 03 




பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக மோசமாக தொடங்கியது பாண்டியர்களுக்கும், முழுமையாக தென் இந்தியர்களுக்கும்... டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள், பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த தமிழகத்தை சூறையாட முடிவு செய்தனர் ....

அவர்கள் மத்திய இந்தியாவில் நிலை கொண்டு இருந்த போது வட கர்நாடகத்தை  ஆண்ட ஹோய்சளர்கள் தங்களது பெரும் பொன் அணிகலன்களை ஸ்ரீரங்கம் அருகில் உள்ள சமய புரம் என்கிற ஊரில் உள்ள சிவன் கோவிலில் பொன் கூரை வேய்ந்து, சேமித்து வைத்திருக்கிறார்கள் என்கின்ற செய்தியை அறிந்து ... அதை அடைய திருச்சியை நோக்கி பெரும் படையுடன் வந்தார்கள் .... 



1311 ஆம் ஆண்டு மாலிக் காபூர் , இந்த கோவிலை அடைந்து அனைத்து செல்வங்களையும் கொள்ளை கொண்டு .. அங்கு உறைந்திடும் அம்பாள கல் திருமேனியை தனது கரங்களால் உடைத்த்தெறிந்தான் ... இந்த திருக்கோவிலை உடைத்தெறியும் புகை மண்டலங்கள் கொள்ளிடம் ஆற்றில் துணி துவைத்துக்கொண்டு இருந்த ஈரம் கொல்லிகளை (this is the tamil name for washerman during 14th century!!!) ஸ்ரீரங்கத்தினுள் சென்று அனைவரையும் எச்சரிக்கை செய்தனர் ..இந்த எச்சரிக்கை அரங்கநாதர் திருவுருவச்சிலையை மற்றும்  தாயார் திருவுருவ சிலையை பாதுகாக்க கால அவகாசத்தை கொடுத்தது .... ஸ்ரீரங்கத்தில் அப்போது நிகமாந்த தேசிகர் , பிள்ளை லோகசாரியார் போன்ற ஆச்சா ரியர்கள் வாழ்ந்து வந்தார்கள் ... 


இவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறினார்கள் ,  பிள்ளை லோகச்சரியார் அரங்கன் திருமேனியியை தாங்கி தென் திசை நோக்கி சென்று மதுரை அருகே அழகர் கோவிலில் தங்கினார் ....பின்பு ஜ்யோதிச்குடி என்கிற வூரில் நோய்வாய் பட்டு மறைந்தார் ..1322 உலுக்க்ன் படை எடுப்பிர்க்கு பிறகு ஸ்ரீரங்கம் மனிதர் வாசம் இல்லாத பகுதியாக மாறியது , அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த நிகமாந்த தேசிகன் உலுக்கன் கானை (பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று முடிசூட்டிக்கொண்ட வன் )சந்தித்தாக ஒரு பரம்பர கதை உண்டு பின்னர் தேசிகர் சத்தியமங் களம் சென்று வாழ்ந்தார் . .திருவரங்கத்தில் வாழ்ந்த  பல்லாவிறவர் அன்று தன்னுயிர் ஈன்று அரங்கன் திருமேனியை காத்ததால் ,இன்று நாம் பல சேவைகளை கண்டு மகிழ்கிறோம் ...அன்று திருவரங்கத்து மக்களையும் அரங்கன் திருமேனியையும் காத்து பல மறைமுக திட்டங்களை தீட்டி காத்த பிள்ளை லோகச்சரியரை நாம் ஒவ்வொருவரும் வணாங்கி போற்ற வெண்டும் 




இவ்வாறாக இந்த கதைகளை பற்றி அறிந்து நான் இந்த முக்கித்துவம் ஆன இந்த சிவன் கோவிலை தேடி என் நண்பர்ருடன் சென்றேன் (19th September 2010, evening 7PM)... சமயபுரம் அருகில் இப்போது உள்ள tollgate அருகில் இந்த கோவிலை கண்டுபிடித்தோம் ... நாங்கள் சென்றே நேரம் அந்த கோவில் குருக்கள் கோவிலை சாத்திவிட்டு வந்து கொண்டு இருந்தார் ... (ஒரு காலத்தில் தென் இந்தியாவின் தலைனாகராக இருந்த இடத்தின் கோவில் ஆள் இல்லாமல் இருக்ககண்டேன் )
பிறகு வழக்கமான வழிபாட்டிற்கு பிறகு மேற்படி விவரித்த முஸ்லிம் படையெடுப்பையும் இந்த கோவில் அழிக்கப்பட்டதையும் சொன்னேன் ,,, அந்த கோவில் காவலாளி அப்போது ஒரு விசயத்தை சொன்னார், கோவில் புனரமைப்பு வேலை நடை பெறுவதால் அன்று காலை கோவிலை சுற்றி மணலில் புதைந்து இருந்த பல பழைய கற்களை இயந்திர உதவி கொண்டு வெளியில் கொட்டி இருக்கிறார்கள் ... (ஆம் அன்று காலைதான் ) 

நான் உடனே அவைகளை பார்க்க வேணும் என்று கூறி வெளியில் சென்று பார்த்தல் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிற்கு கற்க்குவியில் காணப்பட்டது .... நான் இதில் ஏதாவது அம்மன் சிலை காணப்படுகிறதா என்று கேட்டேன் .. அந்த காவலாளி ஒரு பெரிய கல் பாறை அடியில் உள்ள ஒரு சிலையை கண்டதாக சொன்னார் ... என்னுள் மிகப்பெரிய மின்சாரம் பாய்ந்தார் போல் இருந்தது .... 1230 ஆம் ஆண்டு ஹொய்சள மன்னனால் கட்டப்பட்டு 1311AD இல் மாலிக்காபூர் ஆல் தன் கையால் பின்னப்படுத்தப்பட்ட அம்பாள சிலையை காணப்போகிற எண்ணம் மனத்தையும் மீறி உடலையும் ஆட்கொண்டது ...

அந்த மாலை நேர இருளில் கை விளக்கு கொண்டு தேடி அந்த அம்பாள திருமேனியை நிமிர்த்தி வைத்து பார்த்த காட்சியை தான் நீங்கள் காண்கிரீகள் ...... 







மேற்க்கண்ட சிலை கடந்த மாதம் (Feb 2012) வரை மழையில் கிடந்தது .. பிறகு எனது பல முயற்சிகளுக்கு பிறகு அரசு அருங்கட்சியகதுக்கு மாற்றப்பட்டுள்ளது ... 

The english version :- 

14 century dawns on tamilnadu as well as south india in a very bad note..The delhi sultans decided to plunder the south.When they are stationed in northern karnataka , they heard about the richness, the hoysalas stored in their second capital in Kannanur near samayapuram and the richness of that siva temple..


1311, malikkafur invaded this part of the country and plundered this siva temple and destroyed the temple to rumbles , the dust which rose alarmed the washer man in the colidam riverbed. who in turn cautioned the people of srirangam.. it gave srirangam people enough time to move perumal out of srirangam and sealed the main sanctum sanctorum with a wall .during this period Nigamantha desikar and pillailogachariar were living in srirangam ..


pillailoagachariyar took to the south route and ended up near madurai with perumal , latter he died in jyothiskudi due to illness.. 


during this and after another 1322 invasion bUlugh Khan (he is non other than famous mohamad bin thuklak ,  made srirangam a deserted place (Nikamantha Desigan, vaishnava sambrathaya aacharya ,it is learned  to have met him , but some dispute that.. he also left for sathyamangalm ..

because of these so many people's scarifies we are able to enjoy the nam perumal deity   today..



we should profoundly pay our gratitude to pillailogachariyar for his immense statesmanship and wit and valor fitting a king for leading from the front with his bakthi alone for saving srirangam temple... leave alone his contributions in form of writings... every devotee of renganatha should now bow his head in honor of that great and brave soul.... (his statue picture is shown above) 

on 19th September, 2010 around 7 PM i went in search of this temple, and found it near the current day toll gate on the trichy chennai high way near samayapuram.. when we are approaching the temple the priest was leaving the temple (This was the main temple of capital of south india in 1200AD ,with no other soul insight ) 



after the regular worship and during the chat with the priest and only one another person,  the watchman of the temple , i elaborated the muslim invasion and destruction of this temple...The watch man told me, that morning the renovation team has moved a large destructed temple stones with machinery outside the walls of the temple and  took me to a place to a size of a tennis court full of old temple stones... i asked them is there any amman deity found in this heaps?? he told me that there is one under a big boulder ... my heart races to see a thing no one has seen for the past 800 years... (this temple was build by hoysalas in 1230AD and destroyed by Malik kafur in 1311). The main deity will always be destroyed by malik kafur by his own hands according to legend .. 


The above pictures are taken by me while i personally took this deity out with the help of some locals....


after a long persuasion by me to the authorities, this deity is now at the custody of govt ... 












story of srirangam part -04- (1300 AD)in English & Tamil

$
0
0
திருவரங்கத்திற்கு , துலுக்கர்களால் ஏற்ப்பட்ட பெரும் கலாபத்திற்கு (1322 AD க்கு )பிறகு பெரும் துயரம் ஏற்பட்டது.. பிள்ளைலோகச்சரியார் அரங்கன் திருமேனியுடன் தென் திசை சென்ற வுடன் திருவரங்கத்து வாழ் மக்கள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்து சிறு சிறு கோவில்களை கட்டி அரங்கனை வழி பட்டு வந்தனர் ...

இதில் மணச்சநல்லூர் அருகில் உள்ள அழகிய மணவாளம் என்கிற ஊரின் உள்ள ஒரு பாழடைந் த கோவில் ஒன்று என் கவனத்தை கவருகிறது ... இதன் மிக அருகில் நாயக்கர் கால கட்டுமானத்தை ஒப்ப தற்போதிய அழகிய மணவாள பெருமாள் கோவில் இன்று வுள்ளது ... இந்த கோவிலை சுற்றி பின்னமான பல சிலைகள் காணப்படுகின்றன ...

என்னுடைய அனுமானம் ... அரங்கன் (13 th May 1371 ) திருவரங்கம் திரும்பியவுடன் அனைவரும் இந்த கோவிலை கைவிட்டு இருக்கக்கூடும் ... 











மேலும் அரங்கநாதர் ஸ்ரீரங்கத்தை விட்டு திருப்பதியில் இருந்து வந்த காலத்தில்,  திருபுவன சக்ரவர்த்தி குலசேகர பாண்டியன் 30 ஆண்டு(30.01.1344) கல்வெட்டு எண் 252, ARE no. 371 of 1953-54) ஆழ்வார் திருநாட்டுடைய பிரான் திருமாளிகையில் அழகிய மணவாளப் பெருமாள் என்பார் எழுந்தருல்வித்த ஸ்ரீரங்கநாதன் என்று குறிப்பு ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது ...


"குலசேகரன் என்று அழைக்கப்பட்டு வந்த ரவிவர்மன் ஒரு புரட்டாசி மாதத்தில் , ஸ்ரீரங்க நாதனுடைய விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து தீபோத்ஸவம் கொண்டாடினான் என்று பாண்டியர் காலத்துக் கல்வெட்டு குறிப்பிடுகிறது .. (srirangam incription NO. 281, ARE No. 46 of 1891)


இந்த கல்வெட்டுகலில் இருந்து ஸ்ரீரங்கம் பாழ் பட்டு இருந்தமையும் அரங்கனை பல்வேறு இடங்களில் வைத்து வழிபட்டதையும் அறியமுடிகிறது ..


மேல சொன்ன இடத்தையும் தாண்டி கிழக்கு அடையவளஞ்சான் திரு வீதிக்கு கிழக்கில் கும்படம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு ஸ்ரீரங்கநாதர் விக் ரஹ ம் மற்றும் கோபுர அமைப்புகள் , இந்த கல்வெட்டுகளை உறுதி படுத்துகின்றன ...(இந்தமேலே படத்தில்  காணும் கோவிலை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை ... தற்போதிய ஸ்ரீரங்கம் பெண்கள் மேல் நிலை பள்ளிக்கு எதிரில் உள்ள இடம் தான் இது .....இந்த கோவிலை பற்றி எவருக்கேனும் விவரம் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கலாம் ..

English version : -



 After facing great destruction of the place and people by the brutal and savaging muslim invaders, the people of srirangam deserted it to live in nearby forests..

They build their own temple for Lord Renganatha to their own ability and lot of devotion...

Even though there is no record of any sort to provide us with any correct information... I found one place worth taking note...
The place is azhgiyamanavalam, a small village near manachanallure.. There is a very small temple now built by  nayakas in their own distinctive  type temple architecture.. The pictures I have posted here is a small well build temple near that existing one..It is surrounded by lot of broken idols and alike of some Vishnu temple...
I presume that when Renganathar returned to srirangam (13 May 1371AD) people would have also abandoned this temple to  stay in srirangam...

There are two stone inscriptions found in the records of  srirangam ..
1. "thirupuvana sakravarthi kulasekara pandiyan 30th year of rule,   (30.01.1344AD) inscription No. 252. ARE NO. 371 of 1953-54).. States...
"aazhvaar thirunaattudiya piraan thirumaligaiyil azhgiya manavaalap perumal enbaar ezhun tharuvitha sriranganaathan"
2. srirangam inscription No.281, ARE NO.46 of 1891
states ..
"Kulasekaran enkira ravivarman oru purattasi maaththil sriranga nathanudiya vigrahaththai prthistai seithu theeboshthavan kondadinaan"
Apart from the place i felt... there is another one beyond the east adayavalanjon and opp to srirangam girls higher secondary school , kumbadam ... there is a temple with renganathar and arch type paravasudevar like that of srirangam temple....
i couldn’t find this place and this place needs out real research...
Those who have seen anything like this there may contact me ....


story of srirangam part -05(Kumbadam Renganathar)In English & Tamil

$
0
0

கும்படம் என்கின்ற பகுதியில் உள்ள ஒரு ரெங்கநாதர் படத்தை போட்டு அந்த இடம் பற்றி தேடி வருவதை நான்காம் பாகத்தில் எழுதி இருந்தேன் ... 


இந்த பெருமாளின் படத்தை பிரிண்ட் போட்டு பல பேரிடம் காட்டினேன் , அதில் எனது பாக்டரியில் வேலை பார்க்கும் ஒரு பெண் (திருமதி. கலா )என்பவர் மிக சரியாக இந்த கோவில் இருக்கும் இடத்தை கூறிப்பிட்டு உதவினார் . 


இந்த வீடியோவில் பார்க்கும் போது இந்த பெருமாளுக்கு அருகில் தரை எங்கும் சாக்கடை நீர் தேங்கி உள்ளது ... எல்லா புறமும் சுண்ணாம்புக் காரைகள் இன்னும் சில நாள் கூட இருக்காது போல் காணப்படுகிறது ... 
நாம் விரைந்து செயல் படாவிட்டால் இந்த கோவிலின் தொன்மையான கை வேலைப்பாடுகள் நம்மால் அறியமுடியாத படி மறைந்து போகும் .


இந்த இடம் மும்பை தாராவி போன்று மிக குறுகிய பாதைகள் கொண்ட பகுதியாக உள்ளது .. எனது தந்தையார் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம்  இந்த ஊரில் சுமார் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதால் அங்கு இருந்த ஒரு பெரியவருக்கு என்னை தெரிந்து இருந்தது,  எனது வேலையை சுலபமாக்கியது ..

இந்த கோவிலை சுற்றி வந்து பார்த்தவரையில் இதன் அஸ்திவாரம் சில வரிகள் கருங்கர்களாலும், ஒரு அடியிலிருந்து பழமையான செங்கல வரிசைகளால் ஆனதாக தெரிகிறது .. சுதை பல காலங்களில் திருத்தி அமைக்கப்பட்ட தாக தெரிகிறது .. இது கோவிலின் உள் ஒரு கோவிலாக காணப்படுவது ஒரு விநோதமே .. இந்த ரெங்க விமான அமைப்பே பிற்காலத்தில் ஏற்ப்பட்ட ஒன்றாக படுகிறது .. இந்த இடத்தின் பெருமையை அறிந்த எவரோ ... ஒரு மாடல் ரெங்க நாத கோவிலை உட்புறமாக இவ்வாறாக உருவாக்கி இருக்ககூடும் என நினைக்கிறேன் ... 



நான் அருகில் விசரித்தவரை சொந்தம் என்று கோர இந்த இடத்திற்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது .... 


நாம் இந்த இடத்தையும் சரிசெய்ய வேண்டும் அருகில் குடி இருப்பவர் மனதில் எதிர்ப்பு இல்லாமல் ...

google map of this place ::: it is just opp to srirangam highersecondary school .. a small neem tree is the land mark to enter a small lane to reach this temple... 



இதை செய்யும் முறை பற்றி அனைவரின் ஆலோசனை வேண்டுகிறேன் ....





In the last blog of no.4, i have written about a place called Kumbadam near east of srirangam where there is a renganathar temple which presumably constructed around 1340AD, when Nam perumal was away at Tirupathi.  


I took  a print out of this perumal picture and showed to lot of people .. one of my factory worker(obviously a lady,  named Mrs. Kala..) clearly identified this and told me the exact location opp to srirangam boys higher secondery school.. As you can see from the video... the floor is wet with sewage.. the lime martor plasting may not lost long and we may not know the real hand work of the past if we didnot act quickly.....


After a simple look over the temple.. (this place looks  like a tharavi slum, hardly few feet of passage with lot of houses!!) the people in all the houses asked me why i am here and who i am .. thank god my family lives in this place for over 75 years made my stay there acceptable !!!

the temple has granite wall upto a feet height and then old brick masonry ,the lime mortar hand works seems to have been redone many a times.. it is a temple inside a temple... the model renga vimaana to me , may be done in the later period than in 1340"s. may be some one who know the significance of this place would have done this... 





The place is not owned by any one.... it is now being used as a dump yard with out knowing its  significance i donot want to alert the people around that place which they may feel threatening their possession...
we need to save a place which i presume would have been of some significance connected to our past....






Kindly send me your suggestions about how to restore this place.... to my email id 


srirangamviji@gmail.com





The Orlov diamond - 1747AD stolen from srirangam

$
0
0

so many people ask me about what happened to the gold and richness of Srirangam perumal once bestowed by our great kings... now this is the answer.... This is only one of the story known today... many a things have vanished .. and how much more the muslims would have taken away... 

The Orlov diamond 189.62 carats (37.924 g), is a large diamond that is part of the collection of the Diamond Fund of the Moscow Kremlin. The origin of this resplendent relic – described as having the shape and proportions of half a hen's egg. This diamond and a similar gem served as the eyes of the deity in the temple. Legends hold that a French soldier who had deserted during theCarnatic wars in Srirangam disguised himself as a Hindu convert and stole it during 1747.

Compare this with Koh-i-Noor diamond which is half this perumal's diamond.size!!! (105 carats (21.6grms)
this, as written would have another set of diamond adorned the eye of perumal moolavar... I feel lot and lot of things would have been hidden by our people from plunderers and as the age progresses would have forgotten it 

Article 0

$
0
0

Forgotten man of srirangam - Raghunatha Rao, first  Deputy Collector of Trichinopoly 






The municipality of Tiruchirappalli was inaugurated under the Town Improvements Act 1865 on 1 November 1866 covering an area of 18 square kilometers  and originally consisted of two ex-officio and nine nominated members, 
one such person is Mr.Raghunatha rao, who was appointed as deputy collector of Trichy in charge of srirangam and TVkovil.. 


it seems he has done lot good works to srirangam which was waiting for many centuries for him!!!


i came across a small report of Trichinopoly by J.L.Ranking , Sanitary commissioner for Madras, published at 1867.







There are many interesting things said about Mr.Raghunatha rao, and what he has done in srirangam during 1866!!










 If our current corporation take any of these cares after 150 years of its existence , like parking lots and other sanitation things we would be greatly benefited ....

by the way if any one knows about his family can write here...

Changed course of river cauvery at srirangam @ 1190AD

$
0
0

காவேரி ஆற்றின் பாதை மாறிய கதை :-

ஸ்ரீரங்கம் காவேரி ஆறு முன்பு ஒரு காலத்தில் தற்கால ராஜகோபுரம் அருகில் ஓடியாதாமே என்று பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன் ...அதை பற்றி ஒரு சிறு ஆய்வு ...

ஸ்ரீரங்கம் கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் சில விசயங்களை ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் அவர்கள் மிக தெளிவாக எடுத்து எழுதி உள்ளார்.. மேலும் ..

ஸ்ரீரங்கம் கோவிலொழுகு நூலில் கீழ் கண்டவாறு  குறிப்பிடப்பட்டு உள்ளது ..(இந்த நூல் ஸ்ரீரங்கம் கோவில் வரலாற்றை சுமார் 1000 ஆண்டுகளாக தொகுப்பட்ட நூல்)

வருடாவருடம் தற்போதைய ராஜ கோபுரம் அருகில் உள்ள (கோபுரத்துக்கு உள் முதலில் இருக்கும் நாலு கால் மண்டபத்துக்கு இடது புறம்) திருகுறளப்பன் சந்நிதி ...அப்போது இந்த கோபுர சுவரே கிடையாது...


இந்த 1780 AD ஓவியத்தில் தேர் இருப்பது திருக்குறளப்பன் சந்நிதிக்கே !!!இதுதான் நமது காவேரியின் வட கரையாக இருந்தது.




பழைய கோவிலொழுவில் பதியப்பட்டவை ...

மூன்றாம் குலத்துங்க சோழன் (1178-1218 AD) காலத்தில்  தற்போது ராஜகோபுரம் அருகில் உள்ள திருக்குறளப்பன்  சந்நிதி வரை காவேரி வெள்ளம் பெருக்கெடுத்து வந்து திருவரங்கத்தினுள் நீர் புகுந்து ஒவ்வொரு ஆண்டும் அபாயம் ஏற்பட்டது..

இதை போக்க தற்போதைய மேலூர் அருகே உள்ள புந்நாக தீர்த்தம்
(இது தற்போது மேலூர் அருகில் உள்ள விருச்சி மண்டபத்தில் உள்ள இந்த குளமே என்று நினைக்கிறேன் )


(நான்  14/09/2013) இன்று புகைப்படம் எடுத்த போது வேலைகள் நடந்துகொண்டு இருந்தாது மகிழ்ச்சி அளித்தது)

இந்த இடத்தின் கூகிள் மாப் இடம் ..

புந்நாகதீர்த்தம்

அருகில் இருந்து திசை மாற்றி ஸ்ரீரங்கத்துக்கும் திருச்சிக்கும் இடையில் சிந்தாமணி கிராமம் வழியாக திருப்பி விட வேண்டி அப்போது ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த பெரியவர் கூரநாராயண ஜீயர் என்போர், ஸ்ரீரங்கம் கோவிலை நிர்வாகம் பண்ணி வந்த கந்தாடை தோழப்பர் கலந்து சோழனுக்கு கோரிக்கை வைத்தனர்..


இதை அறிந்த சிந்தாமணி கிராமத்து மக்கள் தங்களது கிராம எல்லையில் படுத்து இதை எதிர்த்து போராட்ட்டம் நடத்தினர் ...தண்ணீர் பற்றிய ஒரு போர்டட்டம் திருச்சியில் 1190AD இல் !!!

கல்வெட்டு:-

குலசேகரன் திருச்சுற்று (மூன்றாம்) கிழக்கு பகுதியில் கல்வெட்டு எண் A.R.E.No. 113 of 1938-39 கீழ் கண்டவாறு தெரிவிக்கிறது :-
1.        மூன்றாம் குலோத்துங்கன் இயற்பெயர் வீரராஜேந்திரன்
2.       அரசனுடைய ஆணைப்படி “அண்ணவாயில் உடையான் காங்கேயராயர் என்போன் நியாத்தினை எடுத்துச் சொல்பவராக (arbitrator)நியமிக்கப்பட்டார்.
3.      ஸ்ரீரங்கம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலங்கள் திருவாழி பொறித்த கற்கள் (ஸ்ரீ சுதர்சன சின்னம் ) ஜம்புகேஸ்வரர் கோவில் நிலங்கள் திரிசூலம் பொறிக்கப்பட்ட கற்கள் எல்லைகளாக வைக்கப்பட்டன
4.       திருச்சிராப்பள்ளி வசித்தோருடைய நிலங்கள் திசை திருப்பி விடப்பட்ட காவேரியால் அழிக்கப்பட்டமையால் கொட திட்டை (தற்கால் கொத்தட்டை) என்கிற ஊரில் அவர்களுக்கு மாற்று நிலம் அளிக்கப்பட்டது




“தென்மேற்கு சிராத் தென்னாற்றில் நி ......... திருச்சிராப்பள்ளி யுடையார் தேவதானம் ஆலங்குடியில் விட வெண்டும் நிலத் திருவரங்கத்துக்கு உடலாக விட்டு விட்ட நிலத்துக்கு தலைமாறு கொட திட்டையில் அழகிய மணவாளப் பெருமாள் திரு(நாமத்துக்) காணியிலே பற்றிப் பர்வர்தனை பண்ணக் கடவர்களாகவும் இப்....”

ஒரு மிகப்பெரிய இட பரிவர்த்தனை நடந்து இருக்கிறது வருடம் 1198 AD இல்....


1546 ADஇல் விஜயநகர் அரசர்கள் காலத்தில் இந்த இட பரிவர்த்தனை பற்றி மீண்டும் ஒருமுறை குறிப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது ...

விஜயநகர் மன்னன் சதாசிவராயன் கல்வெட்டு A.R.E. No.13 of 1936-37 , மூன்றாம் பிரகாரம் உள்புறம் அமைந்த கல்வெட்டு ..சிந்தாமணி கிராமத்தை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு காணிக்கையாக குடுத்த போது .. காவேரி ஓட்டம் திருத்தி அமைக்கப்பட்டமை விளக்கப்பட்டுள்ளது ..

இந்த இரண்டாம் கல்வெட்டில் தற்போதைய திருமஞ்சன ஆறு (ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலையில் உள்ள ஒரு பாலத்தை கடந்து வருவீகளே அதேதான் ) அன்றைய நமது காவேரியின் தென் கரை!!!

காவேரியை திருப்பி விட்டபடியால் அந்த இடத்தில் நாணல் புற்கள் நடப்பட்டு நீர் மறுபடியும் வராமல் மலடாக ஆக்கப்பட்டமை பற்றியும் கூறுகிறது .. ஸ்ரீரங்கம் பகுதியில் வாழ்பவர் அனைவரும் அந்த சிறு வாய்க்காலை மலட்டுவாய்க்கால் என்ற அழைப்பர்..



இவ்வாறாக ஸ்ரீரங்கம் மற்றும் திருஆனைக்கா கோவில்களை ஒட்டி ஓடிக்கொண்டு இருந்த காவேரி ஆறு 1190 வாக்கில் சோழ மன்னனால் மிகப்பெரிய முயற்சியால் தற்போது உள்ள இடத்திருக்கு மாற்றி அமைக்கப்பட்டது ..

 



திருவரங்க திருவானைக்கா போர் (1375 AD)

$
0
0
திருவரங்கத்தின்  பிரதான வாயில் (1398AD)
தற்போதைய வெங்கடேஸ்வர மருத்துவமனை பின்புறம் 


திருவரங்க திருவானைக்கா  போர்

இன்றைக்கு ஒரே ஊராக இருக்கும் திருவரங்கமும் திருவானைக்காவும் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டி இருந்தனர் என்பது அதிசயமே...

முகமதியர் படை எடுப்பின் பின்
1371 திருவரங்கத்து அரங்கன் (நம்பெருமாள்) திருவரங்கம் திரும்பிய பின் .

பங்குனி மாதம் நடைபெறும் சில உத்சவங்களின் போது திருவானைக்கா கோவில் உள் சென்று அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதியில் சேவை சாதித்து இளநீர் அமுது செய்து தற்போது கோவில் நுழை வாயில் அருகில் தென் புறம இருக்கும் ஜம்புதீர்த்தத்தில் திருவடிவிளக்கி, அங்கே இருக்கும் மண்டபத்தில் சேவை சாதித்து விட்டு எல்லக்கரை மண்டபம் செல்வது வழக்கம்!!

சுமார் 70 ஆண்டுகள்
(1322 - 1371 AD)வரை அரங்கன் ஸ்ரீரங்கத்தில் இல்லை .. பின்னர் ஒரு மூன்று ஆண்டுகள் (1375ADபெரும் சண்டை ஏற்ப்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் ஒன்பதாம்  ஜீயர் கொல்லப்பட்டார் )  இவர்கள் பழைய படி திருவானைக் கா கோவில் உள் பெருமாளை எடுத்து சென்ற போது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்து போய் இருந்திருக்கிறது .. அப்போது வாழ்ந்த மக்கள் இந்த பழைய வழக்கத்தை நிச்சயமாக ஒரு திணிப்பாகவே எதிர்கொண்டு இருப்பது புரிகிறது ..

இந்த பெருமாள் வருகையை அன்றைய திருவானைக்கா சைவர்கள் மிக கடுமையா எதிர்த்தானர் .. பெருமாள் வருகின்ற அன்றைய தினம் திருவீதிகளில் வசிப்பவர் எவராகினும் தற்கொலை செய்தது கொள்ளுதல் போன்று பல விபரீத விசயங்கள் நடைபெற்றன ..(எவராகினும் இறந்தால் அந்த வீதியில் இறை உத்சவங்கள் நடைபெறுவதில்லை) இந்த தகராறுகள் கை கலப்பாக மாறி இரு ஊரை சேர்ந்த பலர் மரித்தும் போயினர்!! இதில் பலியானவர்கள் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாம் பட்டத்து பராங்குச ஜீயர் மற்றும் பலரும், வேல்ஏந்திய தாசர் என்போரும் அடக்கம்.

ஸ்ரீரங்கம் கோவில் பத்தாவது ஜீயர் ஆழகியமணவாளர் மற்றும் உத்தம நம்பி இருவரும் விஜயநகர் அரசனிடம் சென்று இது பற்றி முறையிட்டு வந்தனர் .

1375 AD  விஜயநகர் அரசன் ஒரு சமாதான குழுவை  ரெண்டு ஊருக்கும் மத்தீஸ்தம் செய்ய அனுப்பினான்.

இதில் . குருவியாச உடையார்,(இவர் அன்றைய விஜயநகர் அரசன் புக்க உடையார் மந்திரி ) கோபால உடையார் , ரகு உடையார் , திருவரங்கத்தி சேர்ந்த உத்தமநம்பி திருவானைக்காவை சேர்ந்த சைவர்கள், அமர்ந்து பேசி, எல்லையை நிர்ணயம் செய்ய பெரியவர் உத்தமநம்பியை கண்களை கட்டி ஓடி செல்லும் பாதையே இருவருக்கும் எல்லைக் கோடு என்று முடிவானது ..

இதில் உத்தமநம்பி என்பது ஒரு குடும்ப பெயர் ..இவர்கள் திருச்சி பகுதியில் அனைத்து நிலங்களையும் நிர்வாகம் செய்தது எல்லா கோவில்களுக்கும் அதை பகிர்ந்து குடுத்து வந்துள்ளனர் (இவர்கள் வைணவர்கள் ) இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பது இவர்களால் உருவாக்கப்பட்டதே ...

இவர்கள் குடும்பம் திருச்சி பகுதியை 1100 AD முதல் 1800 AD வரை மூன்றாம் குலோத்துங்கன் காலம் முதல் ஆற்காடு நாவப் காலம் தாண்டி ஆங்கிலேயர்
1800 ADஇல் கலெக்டர் அறிவிக்கும் வரை யார்  ஆண்டாலும் நிர்வாகம் பண்ணி வந்து உள்ளனர் !

 இவர்கள் தான் தமிழக சரித்திரத்தில், எல்லா கல்வெட்டுகளிலும்  ஒரு 1000 ஆண்டுகளாக காணப்படுகிறார்கள் .. (கொடுமை.. பாட புத்தகங்களில் இல்லை!!) இவர்கள் வம்சத்தினர்  இன்னும் ஸ்ரீரங்கத்தில் அமைதியாக அரங்கனின் மரியாதை பெற்றுகொண்டு  வாழ்கிறார்கள் (
இதை பற்றி பின் ஒருமுறை பார்ப்போம்..)

அன்று தென் காவேரியில் இருந்து வட புறம் கொள்ளிடம் வரை இவர் ஓடிய பாதை ஸ்ரீரங்கம் திருவானைக்கா இரண்டு ஊர்களுக்கும் எல்லையாக அமைந்தது. இவர் பெயர் கிருஷ்ணராய உத்தமநம்பி.

இவர் இரு ஊர்களுக்கும் இடையே ஒரு பேரு மதில் கட்டிவைத்து பல மண்டபங்களையும் கட்டி வைத்தார் ..அதில் இப்போது எஞ்சி இருப்பது ஒரு நுழைவாயில் மற்றும் திருவானைக்கோவில் “ஜம்புகேஸ்வர நகர்” அருகில் (நான் இந்த சுவற்றின் சுவடுகளை 1988 பார்த்து இருக்கிறேன்!!) தற்போது சில கற்கள் மட்டுமே விஞ்சி இருக்கின்றன !!


இங்கு படத்தில் காணும் கற்கள் அந்த சுவற்றின் மிச்சமே !!

இதை தெரிவிக்கும் ஒரு தமிழ் பாடல் இன்றும் அரங்கன் முன் பாடப்பட்டு வருகிறது ..

“மல்லை நிலையிட்ட தோளரங்கேசர்  மதிளாள் பட்ட
எல்லை நிலையிட்ட வார்த்தையும் போலல்ல – நீதிதன்னால்
சொல்லை நிலையிட்ட உத்தநம்பி குலம் தழைக்க
எல்லை நிலையிட்ட வார்த்தை எல்லோருக்கு எட்டெழுத்தே “


இவர் உருவாக்கிய எல்லைக் கோடு தற்போதைய ஸ்ரீனிவாச நகர் முதல் தெருவில் அமைந்தது ...இந்த தெருவில் தற்போது இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியே அன்று ஒரு பதினாறு கால் மண்டபம் இருந்த இடம் என்று வரலாற்று ஆசிரியர் வைஷ்ணவ ஸ்ரீ அவர்கள் எழுதி இருக்கிறார் ..


திருவரங்கத்தின் பிரதான வாயிலின் தற்போதைய அவல நிலை !!!



தெலுங்கு எழுத்துக்கள் கொண்ட ஒரு கல்வெட்டு ...விஜயநகர் காலத்தினாக இருக்க வெண்டும் ...



அழகிய வடிவுடன் கூடிய கிருஷ்ணர் .....



வலது புறம் நரசிம்ஹர் ..
 .


மத்திய மாநில அரசு சண்டை 1490 AD

$
0
0
மத்திய மாநில அரசு சண்டை 1490 AD

(இது இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் தாண்டி .. முந்தைய பதிவில் இருந்து )

தற்காலத்தில் மத்தியில் ஒரு கட்சி மற்றும் மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சி புரிந்தால் ஏற்படும் சண்டை ..மாநில ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலைமை அறிந்ததே ...  இதே மன்னர் ஆட்சி காலத்தில் நடந்தது என்றால்!!


மாலிக்காபூர் படை எடுப்பின் பின் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம்  சுமார் 50 ஆண்டுகள் பாழ் பட்டே கிடந்தது பின்னர்
1371 AD (ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் அந்த வருடம்தான் ஸ்ரீரங்கம் திரும்பினார், சுமார் 70,000 படை வீர்களுடன் .. அதனாலே அவர் "ரெங்கராஜா"என அழைக்கப்படுகிறார் !!


வீரகம்பன்ன உடையார் (விஜயநகர் பேரரசு )மதுரை சூல்தான்களை வென்று தமிழகத்தை நேர் படுத்தினார். இவர் காலத்தில் தமிழகத்தை “மஹா மண்டலேஸ்வரர்கள்
என்கிற பெயரில் அந்ததந்த பகுதி அரசர்கள் விஜய நகர அரசுக்கு கப்பம் கட்டி ஆண்டு வந்தனர்கள் ..(state governments) இவ்வழி வந்தவர்களே மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள்

இதில் விஜயநகர பேரரசு .. பல வித குடும்பத்தினாரால் ஆளப்பட்டது ..

திருச்சி பகுதியை "கோனேரிராயன்"என்போன் மகாமண்டலேஸ்வரனாக ஆண்டு வந்தான் ..இவன் சங்கமகுல விஜயநகர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டு வந்தார்.. (Sangama Dynasty 1336- 1485)



1486 ADஆட்சி மாற்றம் ஏற்பட்டு சாளுவநரசிம்மன் என்போன் விஜயநகர் ராஜவானான் .. இவனின் மூத்த சகோதரர்  “ராமராஜ” என்போன் சன்யாசி கோலம் கொண்டு கந்தாடை ராமானுஜ முனிபெயருடன் ஸ்ரீரங்கத்தில் (தனது தம்பி விஜயநகர அரச அனுமதியுடன் ) பல கையங்கரியங்கள் செய்தது வந்தார் ..(Saluva Dynasty 1485- 1491)

 இவர்தான் வைணவ கோவில்களில் பிராமணர் பிடியில் இருந்து விடுவித்து சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் ஏற்றமும் மரியாதையும் பெற்றுத் தந்தவர் ..

மேலும் எண்ணற்ற  திருப்பணிகளும் செய்தனர் ..!! இவர் வாழ்க்கை வரலாறு ஆராயப்பட வேண்டிய சரித்திர கட்டாயம் !!

இவர் வாழ்ந்த வீடு இன்றும் ஸ்ரீரங்கம் தெற்கு உத்திரவீதியில் உள்ளது ..



மகாமண்டேஷ்வரன் கோனேரிராயன்.. சோழதேச நிர்வாகி .. அவனின் எதிரி
(chaluva dynasty) மத்திய அரசனின் அண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகி !! 


ஸ்ரீரங்கம் கோவில் நிலங்கள் பல பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டன .. அதில் வரும் வருமானம் கோவிலுக்கு கிடைக்கவில்லை .. வழக்கம் போல் அரசியல் தான் .எல்லா விதத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகிக்கு தொல்லை .. தரப்பட்டது ..


இதில் சைவ வைணவ போர் என்று கொள்ள முடியவில்லை காரணம் .. கோனேரிராயன் சாசனம் மற்றும் பல கல்வெட்டுக்களும் அவன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொக்கப்பனை கார்த்திக்கை கோபுர வாசல் கதவுகள் செய்து கொடுத்த கல்வெட்டு உள்ளது , அந்த கதவுகளை  நாம் அனைவரும்
2005 வரை பார்த்து இருப்போம் .. தற்போது அது கோவில் விறகாக பயன்படுத்தப்பட்டு விட்டது ஆம் 1492 AD செய்த ஒரு பொருள் இந்தியாவில் அழிய வேண்டியதே !! பழமையை பற்றி நாம் கவலைப்பட  தேவை இல்லை என்பதால் !!!

உண்டியல் காசும் வருமானம் மட்டுமே  குறியாக உள்ள அரசு அதிகாரிக்கு சரித்திரம் பற்றிய விசாரம் எதற்கு .. அதுவும் இடத்தை அடைத்துக்கொண்டு !!

கோனேரிராயன் பரீதாபி ஆண்டு ஆவணி 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
1492 AD ..கதவுகள் இட்டு .. இரண்டு கிராமங்களை தானமாக குடுத்தது பற்றிய கல்வெட்டு கார்த்திகை கோபுர வாசல் உள் கீழ் புறம்.





இந்த இருவர் பிரச்சனையில் இரண்டு ஜீயர்கள் மற்றும் வேறு இரண்டு நபர்கள் வெள்ளை கோபுரம் மற்றும் தற்போதைய ராஜா கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை புரிந்தனர்!!

இந்த விசயத்தை தனது சகோதரன் சாளுவநரசிம்மன் தளபதி நரசநாயக்கனுக்கு (அப்போது அவன்தான் அரசாண்டு வந்தான் சாளுவநரசிம்மன்(1491AD) இறந்து போய் இருந்தான் அவன் மகன்கள் சிறுவர்கள் )   கடிதம் எழுதி வரவழைத்து, கொனேரிராயனை போரில் வென்று .. கொன்று ... தனது ஆளுமையை நிலை நாட்டினார் .

.கோனேரி ராயன் ஒரு விதத்தில் சோழ ராஜனாக சொல்லப்படுகிறான் .. எனவே இவனது மரணம் தமிழ் அரச வம்சத்தின் கடைசி அரசனாக  கொள்ளலாம் .. (இவன் சாசனங்கள் தமிழில் உள்ளது குறிப்பிடத்தக்கது )

மத்திய அரசை எதிர்த்த மாநில அரசு கவிழ்த்தது .. பின்னர் சாளுவ சாம்ராஜ்யம் நரச நாயக்கனால் கைபற்றபட்டு துளுவ
(Tuluva Dynasty)
ஆரம்பிக்கப்பட்டது






வெள்ளை கோபுர உட்புறம் அழகிய மணவாள தாசர் மற்றும் இரண்டு ஜீயர்கள் நிலைக்கால்களில்  சிலை ரூபமாக...


  அழகியமணவாளதாசர் ..


இவர் சிலை மேல் உள்ள கல்வெட்டு :- 
கீழ கோபுர வாசலில் ஸ்ரீ சௌமிய வருஷம் தைமாதம் இருபதாம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பன்னுகையில் பொறுக்க மாட்டாதேயிந்த திருகோபுரத்திலேறி விழுந்து இறந்த காலமெடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் பெரியாழ்வார் ....





மேலும் வெள்ளை கோபுரம் மேல் இருந்து வீழ்ந்து உயிர் துறந்த ஜீயர்கள் 







 ராஜகோபுரம் கீழ் புர சுவற்றில் அப்பவையங்கார் திருவுருவ சிலையை வெட்டு வைத்தும் கீழ் கண்ட வாக்கியத்தை பதிவு செய்தார்  கந்தாடை ராமானுஜ முனி!!!!..

தெற்கு தற்போதைய ராஜா கோபுரம் மொட்டையாக இருக்கையில் அதில் இருந்து வீழ்ந்து உயிர் துறந்த அப்பாவய்யங்கார் திருவுருவம் ஒரு காலத்தில் இவருக்கு திருவரசு அமைத்து வழி பட்டு இருக்ககூடும் அதனால் சிறு துளைகள் உள்ளன .. இன்று வழக்கம் போல் இவர்களை மறந்து விட்டோம் ..




இவர் சிலை மேல் உள்ள கல்வெட்டு :- 

சுபமஸ்த்து சௌமிய வருஷம் தை மாதம் நாலாம் தேதி வெள்ளிக்கிழமை நாள் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் குடுக்க மாட்டாதே இந்த திருக்கொபுரத்தில் ஏறி விழுந்து இறந்தகாலம் எடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் அப்பாவய்யங்கார். இவருக்கு சுவாமி யேக்காளகள் திருத்தேர்புறப்பாட்டு முதலான அதிகவரிசை பிரசாதித்தருளி பிரம்மமேத சம்ஸ்காரம் பண்ணிவித் தருளி முழுபடித்தனம் கொண்ட ருளினார். யிப்படி நடந்த இந்த முழு படித்தனத்துக்கு விரோதம் பண்ணியவன் ரெங்கத் துரோகியாய் போகக் கடவன் அனுகூலம் பண்ணியவன் ஸ்ரீலட்சுமி பரிபூர்ண கடாக்ஷ பாக்யஸ்தனா  இருக்கக் கடவான்

இனிமேல் நமது திருவரங்கதிற்காக உயிர் துறந்த இம் மாமனிதர்களை அந்த இடத்தை கடந்து செல்லும் போது ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு செல்லுங்கள் !!















விஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்கம் தீவு!!! (1616 AD)

$
0
0

தோகூர் கிராமம் தற்போதைய தோற்றம் 






விஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்கம் தீவு!!! (1616 AD)

இதற்கு முந்தைய பதிவுகளில் சைவ வைணவ போர் (1375 AD) மற்றும் கோவில் அதிகாரியும் அன்று சோழ தேசத்து மகாமண்டல அதிகாரிக்கும் இடையில் நடந்த போட்டியில் , போரிட்டு கொல்லப்பட்ட கோனேரி ராஜ பற்றியும் அறிந்தோம் ( 1495 AD) ..

இன்று மற்றும் ஓர் நூற்றாண்டு கடந்து ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த போர் ஸ்ரீரங்கம் தீவில் நடந்த விசயத்தை பார்க்கப்போகிறோம் ..

இந்த போர் பற்றி அறியும் முன் விஜயநகர சாம்ராஜ்யத்தை பற்றி நாம் சிறிது அறியவேண்டும் ...

தென் இந்தியாவை, முக்கியமாக தமிழகத்தை  முகமதியர்கள் ஆளுகைக்குள் வராமல் மற்றும் நமது கலாச்சார சின்னங்களை அழிக்கப்படாமல் 1371 AD முதல் காத்து வந்தமைக்கு இவர்கள் ஆளுமையே காரணம் ..தமிழகம் பெரும்பாலும் இவர்களாலும் நாயக்க அரசர்களாலும் காக்கபட்டதற்கு விஜயநகர் பேரரசே அஸ்திவாரம். (ஆனால் 1600 AD பிறகு இவர்கள் நகரங்களை பீஜப்பூர் சுல்தான்கள் கொள்ளை கொண்டு அழித்தவற்றை இன்றும் நாம் காண முடிகிறது ஹம்பியில் )

    நமது தமிழகத்தை  நாயக்ககர்கள் 1734 AD வரை ஆண்டு வந்தனர்.  டெக்கான் பகுதியில் சுல்தான்கள் விஜய நகர தலைமை மாகாணங்களை அழித்து ஒழித்தனர் .(விஜயநகர அரசர்கள் அப்போது தமிழகத்தில் வேலூர் கோட்டையை உண்டாக்கி இங்கே தங்கி விட்டனர் .

     தமிழகத்தை ஆண்ட  நவாப் ஆட்சி காலத்தில் பெரும் பாலும் அவர்கள் இந்துக்களை கணக்கு வழக்குக்கு நம்பி இருந்தது தெரிகிறது ...எனவே நமது பகுதியில் பெரும் இடிப்புகள்  ஏற்படவில்லை ஆனால் நிறைய கோவில் நகைகள் கொள்ளை போயின 


   இந்த விஜயநகர அரசனாக 1600 Ad வேங்கடபதி தேவராயன்  ..தனது சகோதரன் மகன் ஸ்ரீரங்க சிக்க ராய என்பவனை அரசன் ஆக்கினான் .. வேங்கடபதி மனைவியின் சகோதரன் ஜக்கராயன் ,இதில் கோபம் கொண்டு ஸ்ரீரங்க சிக்க ராயனை சிறை பிடித்து ஆட்சியை கை பற்றினினான்!!

அரசனுக்கு வேண்டிய அதிகாரிகள் இதனால் சிறையில் இருக்குந்த ஸ்ரீரங்க சிக்க ராயன் இளைய மகன் ஸ்ரீராமன் என்கிற சிறுவனை   வண்ணான் கூடையில் வைத்து சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்தனர் ..
விசயம் அறிந்த ஜக்கராயன் அரசன் சிக்க தேவராயன் அவன் மனைவி பதினேழு வயது மூத்த மகன் அனைவரையும் தன் வாளால் வெட்டிக் கொன்றான்!!

அப்போது தமிழகத்தை இரு வேறு நாயக்க குடும்பங்கள் ஆண்டு வந்தன ..தஞ்சை மற்றும் மதுரை நாயக்ககர்கள்.. (வழக்கம் போல் விரோதிகள் !!)

தஞ்சை நாயக்கனாக அப்போது இருந்தவன் மிக மிக புகழ் வாய்ந்த இரகுநாத நாயக்கன். இவனது கீர்த்திகளை பற்றி பல தெலுங்கு பாடல்கள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் தற்போது கிடைக்கிறது  .. சிறையில் இருந்து கடத்திவரப்பட்ட இளவரசன் ஸ்ரீராமனை  விஜய நகர தளபதி யச்சமநாயக்கர் ..தஞ்சை அரசனான இரகுநாத நாயக்கனிடம் ஒப்படைத்து கும்பகோணத்தில் விஜயநகர பேரரசனாக மூடி சூட்ட வைத்தனர் .அதை போற்றும் விதமாகவே  கும்பகோணத்தில் தஞ்சை அரசன் இரகுநாதநாயக்கன்  இராம பட்டாபிஷேக கோலத்தில் அமைந்த இராமசுவாமி கோவிலை கும்பகோணத்தில் அமைத்தான் ...

ஜக்கராயன், மதுரை நாயக்கர் துணையுடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி தஞ்சையை தாக்க திட்டமிட்டு இருந்தான் .. இந்த செய்தி இலங்கையில் போரில் வெற்றி கொண்டு அங்கு முகாம் இட்டு இருந்த தஞ்சை அரசன் இரகுநாத நாயக்கனுக்கு தகவல் பெறப்பட்டு ஸ்ரீரங்கம் நோக்கி வந்தான் ...இதனை தடுக்க கல்லணை அணையை விஜயநகர படைகள் இடித்து விட்டு தஞ்சாவூர் பெரும் பகுதி வெள்ளத்தில் ஆழித்தின






தோகூர் எனப்படும் ஊர் இப்போது கல்லணையின் ஒரு பகுதியாக உள்ள ஒரு சிறு ஊர் .. மேல் காணும் படத்தில் இரண்டு செல் போன் டவர் உள்ள ஊரே அது ..!! தற்போது திருச்சி செல்லும் சாலை மேல்  ஒரு ஐயனார் கோவில் ஒரு பழமையான ஒரு பெருமாள் கோவில் உள்ளது .. தற்சமயம் பெருவாரியான மக்கள் கிருஷ்துவர்களாக இருக்கிறார்கள் .



இரண்டு படைகளும் தற்போதைய கல்லணை பகுதியில் பெரும் சண்டையில் இடுபட்டன.. (
portugies missioniery Barradas , என்போர் இந்த சண்டையை பற்றி குறிப்பிடும் போது இது இந்தியாவில் நடந்த மிக அதிக மக்கள் ஈடு பட்ட போர் (சுமார் பத்து லக்ஷம் பேர்) இது போல் இதற்க்கு முன்  நடந்ததில்லை என்று எழுதியுள்ளார் ...

இந்த போரில் ஜக்கராயன்  படைகள் தோல்வியுற்றன... இவ்வாறாக விஜயநகர சாம்ராஜ்யம் ஸ்ரீரங்கத்தில் கீழ் புற எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் கரையில் காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் முடிவுற்றது ...


இந்த போருக்கு பின் நாயக்க மன்னர்கள் தனி உரிமை பெற்று தமிழகத்தை ஆண்டனர் (முதல் கப்பம் கட்டாத நாயக்கன் நமது திருமலை நாயக்கன் !!) ..இந்த போர் முடிவில் தான் மதுரை நாயக்கர்கள் திருச்சியை தலைநகராக கொண்டனர் (1520 AD)

.பிரான்சிஸ் டே அப்போது சிறு குறுநில மன்னாக இருந்த விஜயநகர் அரசன் ஸ்ரீராமனுக்கு (தோகூர் போருக்கு காரணமான சிறுவன்)  பிறகு பட்டத்துக்கு வந்த பேட வேங்கட ராயாவிடம்  எழுதி வாங்கிய ஒரு கடல் கரையோர நிலம் தான் ஜெயலலிதா தற்போது அமர்ந்து ஆட்சி புரியும் புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George) என்பதை அனைவரும் அறிவோம்  !!

இது நடந்த நாள்.. நள ஆண்டு ஆஷாட மாதம் வளர்பிறை பஞ்சமி திதியுடன் சூரியன் பூசத்திலுள்ள நாள் (மகம் )1616 AD june 9th Sunday..





திருக்குறளப்பன் சந்நிதி , தெற்குவாசல் ஸ்ரீரங்கம்

$
0
0






திருக்குறளப்பன் சந்நிதி ..









ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் உள்ளே நுழைந்தவுடன் நாம் காணும் நான்கு கால் மண்டபமும் அதன் மேற்புறம் உள்ள சந்நிதியும் 1546 CE இல் தாத்தாச்சாரியார் என்பவற்றின் ஆணைப்படி ஸ்ரீரங்க தேவராயர் என்பவரால் கட்டப்பட்டது ..



இதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் படங்களாக இணைக்கப்பட்டுல்லன ..(இந்த கல்வெட்டு புத்தகத்தை எனக்கு குடுத்து உதவிய நண்பர் Deepak Ram அவர்களுக்கு என் நன்றிகள் பல...






இந்த கோவில் க்ராபக்ரஹாம் மற்றும் முன் மண்டபங்கள் .. முன்னே இன்று நாம் வீதியில் காணும் நான்கு கால் மண்டபம்கள் எல்லாம் செய்து வைத்தான் .

இந்த கோவிலின் கோபுரங்கள் 1859 புகைப்படத்தில் தெளிவாக தெரிந்தாலும் பின்னர் 1900 பிறகு எடுக்கப்பட்ட படங்களில் காணப்படவில்லை ..

மேலே காணும் 1780CE வரைந்த படத்தில் ஒரு தேர் இருப்பது இந்த கோவில் மிக சிறப்பாக ரதஉத்சவங்கள் நடைபெற்று இருந்தது தெறிக்கிறது ..


இந்த ஆலையம், தனியார் ஆலையம் என்று 1942 ஆண்டு அரசுடன் நடந்த கோர்ட் கேஸ் இல் தீர்ப்பாகி தற்போது ஆறு தாத்தாச்சாரியார் குடும்பங்களின் சுழல் முறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அன்றைய 1540 களில் வாழ்ந்த தாத்தாச்சாரியார் மிகப்புகழ் வாய்ந்தவராக இருந்திருக்கிறார் ... அவருடைய செல்வாக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தில் மிகுதியாக இருந்தமை கோவில் ஒழுகுவில் தெரிகிறது ...

இவர் வீரநாராயண எரி (தற்கால வீராணம்) ஏரிக்கு கரைகளை பலப்படுத்தவும் மதகுகளில் கற்கள் அமைக்கவும் பொருள் உதவி செய்ததாக தெறிக்கிறது ..

இந்த இடத்தில் இந்த ஆலயம் 1500 CE அமைய காரணம் ...இங்குதான் முன்னொரு காலத்தில் காவேரி நதி அரங்கனின் ஆலயத்தின் அருகே சென்று கொண்டு இருந்த காலத்தே முக்கியமான  படித்துறையாக இருந்தது...

அதை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் ....

மேல காணும் 1780CE வரையப்பட்ட படத்தின்  =>   HD print download   <=   செய்ய ..







காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 1

$
0
0



திருவரங்கத்தின் சிறப்பே காவேரித்தாய் அரங்கனை மாலையாக பெருமை சேர்ப்பது எங்கும் காணாத ஒன்றே!!

இப்படியான ஒரு மிகப்பெரிய நதியை மூன்றாம் குலத்துங்க சோழன் (1178-1218) காலத்தில் தற்சமயம் உள்ள ராஜகோபுரம் அருகில் பாய்ந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து தற்போது இருக்கும் இடத்திற்கு கிட்ட தட்ட ஒரு கிலோ மீட்டர் தள்ளி கட்டு வித்த மிக வரலாற்று சிறப்பு மிக்க விசயம் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளை நீங்கள் இங்கு காண்கிறீர்கள் .

இந்த பதிப்பு வார நாட்களில் முழுமையாக வந்தால் படிக்க முடியாது என்பதால் சிறிது சிறிதாக எழுதலாம் என்று நினைக்கிறேன் ..


நாளையில் இருந்து இந்த கட்வேட்டுக்கள் மற்றும் இன்றைய தினம் அன்று காவேரி பாய்ந்த இடங்கள் எவை எவை என்று பார்ப்போம் .


.இதில் பல சுவாரசியமான விசயங்களை காண்போம் !!!


விஜயராகவன் கிருஷ்ணன்

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 2

$
0
0
காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 2
காவிரியின் மாற்றம் பற்றிய கல்வெட்டுப்படிவங்கள் படங்கள் முந்தைய பதிவுகளில் பார்த்தீர்கள் .. அவை மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சி காலத்தில் 1198 CE இல் பொறிக்கப்பட்டது ..


.இந்த கல்வெட்டுக்களை முழுமையாக படித்தோமேயானால் வெள்ளைக்காரன் வந்துதான் நில அளவை பற்றிய அறிவு நமக்கு (தமிழர்க்கு ) கிடைத்தது என்கிற ஒரு தவறான எண்ணம் தகர்க்கப்பட்டது!!


அன்று காவேரியில் இன்று காணும் மணல் கொள்ளை இல்லாதபடியால் .. வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டு பல விளைநிலங்கள் மண் மேடு இட்டு பயனில்லாமல் போய்விட்டது..


முதலில் "அண்ணவாயில் உடையான் காங்கேயராயர் "என்பவர் இதற்க்கெல்லாம் நிர்ணயம் செய்யும் ஒரு பொது அதிகாரியாக நேமிக்கப்பட்டார் ..


திருவரங்கம் கோவில் நிலங்களும், திருவானைக்கா கோவில் நிலங்களும் தனி தனியே அளந்து சுதர்சன சக்கரம் பொதித்த சின்னம் ஸ்ரீரங்கம் நிலத்திற்கும் , திரிசூலம் பொறித்த சின்னம் திருவானைக்கா கோவில் நிலங்களுக்கும் இடப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டன ..


இவ்வாறு செய்யும் காலத்து .. சிந்தாமணி கிராமத்து (தற்கால அண்ணாசிலை பகுதி ) மக்கள் தங்களது எதிர்ப்பை கிராமத்து எல்லையில் படுத்து தெரிவித்த விசயமும் சொல்லப்பட்டு உள்ளது ..(1198 ஆம் ஆண்டு நமது ஊர் எப்படி இருந்தது .. நமக்கு நாகரீகம் சொல்லிக்குடுத்தாக சொல்லப்படும்  வெள்ளைக்காரன் ஊர் எப்படி இருந்தது என்று உங்கள் முடிவுக்கே விடுகிறேன் )

இவ்வாறு தனியார் நிலங்கள் எடுக்கப்பட்டதற்கு மாற்றாக கொடதிட்டை (தற்கால கொத்தட்டை ) என்கிற கிராமம் அவர்களுக்கு மாற்றாக வழங்கப்பட்டது ..

காவேரி ஆறு ஸ்ரீரங்கத்திற்கு மேற்கே மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள புந்நாக தீர்த்தம் (நம்பெருமாள் ஜீயபுரம் செல்லும் போது இங்கு தீர்த்தவாரி கண்டருலுவார். எனது ஜீயபுரம் புகைப்பட, காணொளி காட்சிகளிலும் இதை காணலாம்) அருகில் இருந்து தென் புறமாக திருப்பி தற்போதைய இடம் வழியாக திருப்பப்பட்டது ..

திருவாழி பொருத்திய கற்கள் பற்றிய செய்திக்காக ஒரு படம் போட நினைத்தேன் .. அதற்காக அதே காலத்தை ஒத்த ஒரு படம் .


. இது தெற்கு உத்திர வீதியில் உள்ள மணவாள மாமுனிகள் சந்நிதி வாசலில் உள்ள பாண்டியன் காலத்து சின்னம் .வருடம் 1251 CE .

.இது அந்த அரசனின் தளபதி தஞ்சலூர் உடையான் வர்ந்தருவான் பல்லவராயன் திரிதண்டி சன்யாசிகளுக்கு கட்டியது ..(மணவாள மாமுனி இந்த கல்வெட்டு (மற்றும் மண்டபம் )வைத்த போது பிறந்திருக்கவில்லை!!!

பொன் வேய்ந்த பாண்டியன் காலத்து கல்வெட்டு 1251

இந்த மடம் கட்டப்பட்டபோது மணவாள மாமுனிகள் பிறக்கவே இல்லை !!! (அந்த சக்கர சின்னத்தை பல முறை அவர் தொட்டு இருக்ககூடும் !!) 
விஜயராகவன் கிருஷ்ணன்

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 3

$
0
0
காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 3


ஸ்ரீரங்கம் கோவில் காவேரி ஆற்றின் சீற்றத்தாலே பலமுறை மண் மேடு  இட்டும் வெள்ள நீரினால் அவதியுற்றும் வந்ததை கண்டு அதை மாற்ற திருவரங்கத்தை அப்போது நிர்வகித்து வந்த "கூரநாராயண ஜீயர் "கந்தாடை தோழப்பருடன் இணைந்து இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டார் ..என்பதை பார்த்தோம் ..

நாம் முன்பே பார்த்தது போல் சிந்தாமணி பகுதி மக்கள் இந்த மாறுதல் அரங்கனையும் அவன் திருவரங்கத்தையும் காக்கவே என்று சொல்லியும் தங்கள் நிலங்களை அளிக்க மறுத்தே வந்தனர் .. அவர்களை கூரநாராயண ஜீயர் தனது மந்திர சக்தியால் சமாதானப்படுத்தி கைகொண்டார்.

கோவில் திருவோழுகு இந்த விசயத்தில் நிறைய தோப்புகளை நீக்கி திருவரங்கத்தின் தென் புரத்தின் வழியாக காவேரி வெட்டப்பட்டதை கூறுகிறது ..

இன்றும் காவேரி ஆறு மேலூருக்கு அருகில் இப்படி திரும்பி இருப்பதை காணலாம் ... இந்த மாற்றம் நடந்த பிறகு முன்பு தென் புறம் (அதாவது இன்று காவேரி ஓடும் இடத்தில் இருந்த ) அய்யானர் கோவில் மற்றும் பிடரி கோவில்களை வட புறம் நகர்த்தி கட்டப்பட்டது ..

தற்கால மேலூர் ஐய்யனார் கோவிலில் உள்ள ஒரு தவக்கோல ஜைன மத துறவியின் சிலை .. அன்று ஸ்ரீரங்கத்தில் ஜைன அகரங்கள் இருந்தமைக்கு ஒரு சான்று .. (அதை அவர்கள் மணவாள மாமுனிகள் என்று எழுதி இருக்கிறார்கள் )

காவேரியில் இருந்து ஒரு அணியரங்கன் வாய்த்தலை (regulator ..இன்று அணைக்கரை என்கிற இடம் ) கட்டுவித்து , ஒரு வாய்க்காலை வெட்டி வைத்து ... அந்த வாய்க்கால் முன்பு காவேரி சென்ற அதே பாதையில் செல்லும்படியாக செய்து !!( இன்று இருக்கும் அந்த வாய்க்கால்தான் அந்நாளைய காவேரியின் தென் கரை )  இதற்காக கரை காப்பானாக தனது சீடன் "காருணாகர தாசன் "என்போனை அவர்  நியமித்தார் ..

இந்த ஆறு (இன்று அம்மாமண்டபம் சாலையில் ராஜகோபுரம் முன் உள்ள பாலம் இதன் மீதுதான் செல்கிறது ) மலட்டு ஆறு என்றே உள்ளூர் வாசிகளால் அறியப்பட்டு வந்துள்ளது ..

இந்த சிறிய வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் வட புறம் நாணல் நடப்பட்டு (அந்த வாய்க்காலில் இருந்து ராஜகோபுரம் வரை ) நிலம் மலடு ஆக்கப்பட்டதை .. கோவில் ஒழுகு மற்றும் கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றான் ..

ஒரு பெரிய ஆறு ஓடிய பாதையில் பல நூறு அடி ஆழம் வரை வெறும் மணல் மட்டுமே இருக்கும் .. அதில் எந்த ஒரு செடியும் வளராது .. அவற்றை மாற்ற நாணல் செடிகளை வளர்த்து இன்று நீங்கள் காணும் பசுமையான பகுதியாக அவற்றை மாற்றிய அந்த விஞ்ஞான முன்னோர்களை என்ன சொல்வது???

...

கூரனாரயனர் என்கிற அந்த மகான் நமது ஸ்ரீரங்கத்தை ஒரு எந்திரம் போல அமைத்து பல நெடும் காலம் நாம் அரங்கன் நகர் வாழ பல கோவில்களையும் மந்திரப்பூர்வமாக அமைத்தார்

காவேரி சென்ற பாதையில் கூரனாராயனர் கட்டிய கோவில்களை வரும் நாட்களில்  பார்ப்போம்..





அரங்கமாநகர் மீது துலுக்கர் படையெடுப்பும் அரங்கன் உலாவும்

$
0
0

அரங்கமாநகர் மீது துலுக்கர் படையெடுப்பும் அரங்கன் உலாவும்

வரும் ஞாயிறு அன்று (31.05.2015) நம்பெருமாள் ஸ்ரீரங்கவிட்டு வெளியேறி பல காடு மலைகள், திவ்ய தேசங்கள் மலைகுகைகளில் தங்க வைக்கப்பட்டு திரும்பவும் 1371 ஆண்டு திருவரங்க திரும்பிய நன்னாளை அனைவரும் கொண்டாடும் விதமாக பத்தர்கள் அனைவரும் கூடி அன்று காலை ஒரு ஊர்வலமும், மாலையில் எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் சுவாமிகள் இதை பற்றி ஒரு சிறப்புரை ,ரங்கா விலாச மண்டபத்தில் ஆற்ற இருக்கிறார் .. அனைவரும் அதில் கலந்துகொண்டு சிறப்பிக்க பிறார்த்திக்கிறேன்..

தென் இந்தியாவின் மீது முதல் முதலில் படையெடுத்து வந்தவன் மாலிக் காபூர் (1311-13) இரண்டாம் முறை படையெடுத்து வந்தவன் உலுக்கன் எனப்பெயர் கொண்ட முகமது பின் துக்ளக் .

இந்த இரண்டாம் முறை படை எடுத்துவந்த போது பலருடைய தலை கொய்யப்பட்ட கோடுர சம்பவம் நடைபெற்றத்தாக கோவில் ஒழுகு கூறுகிறது “ பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வன் மேட்டுக்கலகம் “ என்று நம்பெருமாள் பங்குனி உத்சவம் எட்டாம் திருநாள் அன்று வட்திருக்காவேரி (கொள்ளிக்கரை இன்றைய பஞ்ச கரை ரயில்வே கேட் அருகில் ) கரையில் அன்று இருந்த பன்றியாழ்வான் கோவிலில் பெருமாள் எழுந்தருளி இருந்த போது .. உலுக்கன் வருகை அறிந்து மக்கள் தொடர்ந்து வருவரே என்று அஞ்சி எவரும் அறியாமல் திரை இட்டு பெருமாள் மற்றும் உபய நாச்சியார்களை மறைவாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்றார்கள் ..
இந்த இடம் இப்போது இருக்கும் நிலை பற்றி ஒரு காணொளி
https://youtu.be/r3MOwlA8QcQ

1336 ஆம் ஆண்டு விஜயநகர் சாம்ராஜ்யம் இறைஅருளால் இந்தியாவில் ஏற்பட்டது.. நம்பெருமாள் திருமலையில் இருந்தபோது செஞ்சியை ஆண்டுகொண்டு இருந்த கோபண்ண உடையார் திருமலையில் வருகை தந்து அரங்கநாதனை திரிசித்து விட்டு  ஸ்ரீரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ண சித்தம் கொண்டார் ..

நம்பெருமாளை சிங்கபுரம் என்கிற சேத்திரத்தில் எழுந்தளுப்பண்ணி  பல காலம் ஆராதித்து வரும் காலத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து சிங்கபிரானுடைய (முந்தைய ஸ்ரீரங்கமும் மத்வர்களும் பதிவில் சொன்ன துலுக்கர்களிடம் பழகி அவர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் பூஜை செய்ய அனுமதி வாங்கியவர் ) குமாரர் திருமணத்தூண் (திருமணல்தூண் நம்பி என்றும சில குறிப்புகள் சொல்லுகின்றன ) அன்றைய கோவில் அதிகாரி உத்தம நம்பியை செஞ்சிக்கு அனுப்பி கோபண்ண உடையாருக்கு கண்ணனூரில் உள்ள துலுக்கன் படை பற்றிய செய்திகளை சொல்லி அவனை வென்று ...

1371 CE பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் அழகியமனவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான்  இதற்கான கல்வெட்டும் ஒன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் காணப்படுகிறது .






இந்த கலபக்காலத்தில் (1311-1371) இருமுறை படையெடுப்பு நடைபெற்றதை பார்த்தோம் .. 

அதில் முதல் முறை படை எடுப்பின் போது நம்பெருமாளை டெல்லி சுல்தான் எடுத்து சென்று விட அதை ஸ்ரீரங்கம் கோவில் ஸ்தலத்தார் திரும்ப மீட்டு கொண்டு வந்த விசயமும் அறிய முடிகிறது .. (இதை பற்றிய தெளிவான விளக்கங்கள் கோவில் ஒழுகிலே மற்ற பதிவுகளிலோ  எதுவும் இல்லை என்பதால் அதை முதல் படையெடுப்புக்கும் இரண்டாம் படையெடுப்புக்கும் இடப்பட்ட காலத்தில் (1311-1322) அனுமானிப்பதே சரி என்று   ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கருதுகிறார் )

பின்னர் அரங்கனதரை பிள்ளைலோகசாரியார் உபய நாச்சிமாருடன் மறைவாக எடுத்து சென்றதும் தெரிகிறது ..(1322)

இந்த இருமுறை அரங்கன் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறிய (1311 க்கு பிறகோ அல்லது 1323 க்கு பிறகு தெரியவில்லை ) காலத்தே ஒரு அரங்க பெருமானை புதிதாக செய்து நம் பெரியோர்கள் வழிபட்டு வந்துள்ளார்கள்.

உங்களில் பலருக்கு தெரியாத விசயம் அரங்கன் மூலஸ்தானத்தில் வலது புறத்தில் ஒரு பெருமாள் இருப்பார். நம்பெருமாள் உயரமே உள்ள அவரின் பெயர் திருவரங்கமாளிகையார் . அவரே அந்த கலாபக்காலத்தில் செய்து வைக்கப்பட்ட பெருமாள்..

இதே காலத்தே தாசி ஒருத்தி அரங்கத்தினுள் தங்கி இருந்து துலுக்க படைத்தளபதியை தந்திரமாக அன்றைய உயரமான கோபுரமான கிழ வாசல் கோபுரத்தின் மீது ஏற்றி அதில் இருந்து அவனை கீழே தள்ளி கொன்று தானும் உயிரை மாய்த்துக்கொண்டாள் ..

அவளின் பெயர் காரணமாக (வெள்ளையம்மாள்) அந்த கோபுரத்தை வெள்ளையம்மாள் கோபுரம் என்றும் (வெள்ளை கோபுரம்)  அழைக்கப்பட்டு வருகிறது ..

வெள்ளையம்மாள் இறக்கும் வேளையில் கோவில் அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து சென்றதை, தேவ தாசி ஒழிப்பு சட்டம் (1953) வரும் காலம் வரை செயல் படுத்தி வந்தனர் ..

அவை,.. ஸ்ரீரங்கம் கோவிலில் விளக்கு மற்றும் ஆடல் பாடல் தூய்மை பணி செய்து வந்த தேவ தாசிகளுக்கு .. அவர்கள் இறந்தால் கோவில் மடப்பள்ளியில் இருந்து அரங்கனுக்கு அமுது செய்யும் அடுப்பில் இருந்து நெருப்பும், திருக்கொட்டார

த்தில் இருந்து வாய்க்கு அரிசியும், (அமுது படி), அரங்கன் போட்டுக் கலைந்த மாலை, மற்றும் அரங்கன் கோவில் தீர்த்தம் இவை அனைத்தும் கிடைத்து வர வேண்டிக் கொண்டு இறந்தாள்..

திருவரங்கதில் நம் முனோர்கள்  பெரும் பாடு பட்டு அரங்கனை மீட்டு திருவரங்கம் திரும்பிய நாளை 31.05.2015 அன்று கொண்டாடுகிறோம் ..
அரங்கனுக்காக  பலா ஆயிரம் பேர் உயிர் துறந்து நாளை நினைவில் கொள்ள வரும் ஞாயிறு அன்று காலை ஸ்ரீரங்கத்தில் கூடுவோம் ..












அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 01

$
0
0
அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 01


அரங்கன் பற்றி நாம் அறிந்த சரித்திரம் மிக குறைவே .. சுமார் 1200 ஆண்டுகள் இருக்கலாம்!! அதற்கு முன் அவர் செய்த சரித்திர பணிகள் நாம் அறியமாட்டோம்!! ராமனுஜர் காலத்தே .. சமண பௌத்தம் போன்ற வேதப்புறம்பான மதங்களை வென்று எடுக்க உதவியதை முன்பே நான் எழுதி இருக்கிறேன்..

நாம் இப்போது காணப்போவது 14ஆம் நூற்றாண்டின் கோரமுகம் .... பாண்டிய மன்னர்கள் வாரிசு சண்டையிட்டுக்கொண்டு மதுரை அரசை மற்றும் தமிழகத்தை மிக மிக துண்டு துண்டான அரசர்கள் கொண்ட வலிமை யற்றதாக ஆக்கி வைத்து இருந்தனர் (மாறவர்மன் குலசெகரனுடைய மகன்கள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் சண்டை !!)
(
On the death of Kulasekara Pandyan I in 1308 CE, a conflict stemming from succession disputes arose amongst his sons. Jatavarman Sundara Pandyan III the legitimate & younger son and Jatavarman Veera Pandyan II, the illegitimate older son (who was favoured by the king) fought each other for the throne. Accounts of Muslim historians Wassaf and Amir Khusrow say he was killed by Sundara Pandyan in 1310 CE.[18] This led to a long protracted civil war.)


இவர்களின் வாரிசு சண்டை Amir Khusrau என்கிற முஸ்லிம் இலக்கியவாதி தனது நாட்குறிப்பில் எழுதும் அளவிற்கு வடநாட்டிலும் தெரிந்து இருந்து .. அங்கிருந்து மாலிக் காபூர் என்கிற கொடுங்கோலன் தமிழகத்தை சூறையாட வந்து அனைத்து செல்வங்களையும் ... இறைமூர்த்தங்களையும் நிர்மூலமாக்க உதவியது ..இவன் கொள்ளை அடிக்க வந்தவன் மட்டுமே!! இவனால் ஸ்ரீரங்கத்தில் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரவர் என்று கோவிலொழுகு கூறுகிறது... 



பின்னர் 1323 உல்லுக்கான் என்று அழைக்கப்பட்ட முகமது பின் துக்ளக் படையெடுத்து வந்து ...மதுரையில் ஒரு ஆட்சியை நிறுவினான் ..

(https://en.wikipedia.org/wiki/Madurai_Sultanate) அதுவரை நமது அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டாலும் கோவில்கள் நகரங்களை அழிக்க மாட்டார்கள் .. பாமர்களை கொல்ல மாட்டார்கள் .. பெண்களை மானபங்க படுத்த மாட்டார்கள் .. இவை அனைத்தும் நடந்தன !!!


ஹிந்துக்களின் மீது கட்டவிழ்க்கப்பட்ட கொடூரங்களை நேரில் கண்டு எழுதிய இபுன் பட்டுடாவின் (
http://ibnbattuta.berkeley.edu/) பார்வையில் ஹிந்து கணவன் மனைவி மற்றும் சிறு குழந்தைகளை கூட கொடூரமான முறையில் கொன்றதை காண சகிக்க முடியவில்லை என்று ஹிந்துக்களின் மீது பரிதாப்பட்டு எழுதியுள்ளார் !!



இவை அனைத்தும் நடந்து கொண்டு இருந்தபோது .. ஹோய்சாள  மன்னனா வீரவல்லாளன் (1341) சுமார் ஒரு லக்ஷம் படை வீரர்களுடன் மதுரை சுல்தானின் வெறும் 6000 படை வீர்களுடன் தோற்ற கதை கேட்டால் நாமெல்லாம் நம்ப மாட்டோம் ... ஆம் .. முஸ்லிம் படைகளிடம் சமாதம் பேசி .. அவர்களால் வஞ்சிக்கப்பட்டு கொல்லபட்டு .. . அவனது பிணம் வைக்கோல் திணிக்கப்பட்டு ... இன்று கோரிப்பாளையம் என்று (அதனால்தான்) அழைக்கப்படுகிற இடத்தில் தொங்கவிடப்பட்டு ... கேவலப்படுத்தப்பட்டது .. 



In c.1342-3, a decisive war that would end the Hoysala fortunes was fought at Kannanur. Veera Ballala III fought a pitched battle against Ghiyas-ud-din, the Sultan of Madurai. Just when a Hoysala victory seemed imminent, The Hoysala monarch was captured, and according to historians Chopra et. al, was "strangled and flayed". His son, Veera Ballala IV met the same fate in c.1346, bringing to an end the glorious rule of the Hoysalas.


பின்னர் சுமார் பல ஆண்டுகள் தமிழகத்தில் எவருமே இந்த துலுக்கர் கொடூரத்தை தட்டிகேட்க வரவில்லை!!



இவை எல்லாம் ஒரு புறம் இருக்க .. 1323 ஆண்டு துக்ளக் படையெடுப்பில் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறிய நம்பெருமாள் ..பல நாடுகள் சுற்றி கடைசியில் திருமலையில் வாசம் செய்தது வந்த காலத்தே.. விஜயநகர் சாம்ராஜ்யத்தின் அரசர் வீரகம்பண்ண உடையாரின் படைத்தலைவர்களில் ஒருவரான கோபணார்யன்... செஞ்சி பகுதி இவரின் ஆதிகத்தின் கீழே இருந்தது .. இவர் திருமலையில் சென்று அரங்கனை தரிசிக்கிறார்...




இவர் அரங்கனின் மிது மிகவும் பரிவு கொண்டு (அரங்கனுக்கு தெரியும் எவரை தெர்ந்தெடுத்து காரியங்களை செய்விக்க வேண்டும் என்று !!) தனது ஊரான செஞ்சிக்கு எடுத்து சென்று ஆராதித்து வந்தார்..



ஒருலக்ஷம் படையுடன் சென்று வைக்கோல் அடைத்த பிணமான வீரவல்லான் இருக்க .. அரங்கன் எப்படி துலுக்கனை வெல்ல சரித்திரத்தில் இடம் பிடித்தான் என்பதை நாளை பார்ப்போம் ....
 

அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 02

$
0
0

அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 02



திருமலையில் இருந்த அரங்கனை தனது நாட்டிற்கு (செஞ்சிக்கு) எழுந்தருளப்பண்ணி அங்கே பல உத்சவங்கள் கொண்டாடி கொண்டு இருகிறார் கோபணார்யன் என்கிற செய்தி ஸ்ரீரங்கத்தை அடைந்தது ..


அன்றைய தினம் ஸ்ரீரங்கத்தில் பலர் வசிக்கவில்லை ..அது மிகவும் பாழ்பட்டு இருந்தது ..1323 முகமது பின் துக்ளக் கொடூர தாக்குதலால் பலர் இறந்தும் ஸ்ரீரங்கத்தை விட்டும் தப்பி ஓடிவிட்டனர் ..


ஸ்ரீரங்கம் கோவில் தற்போதைய சந்தனு மண்டபத்தில் முஸ்லிம் படைத்தளபதி ஒருவன் தங்கி இருந்து .. எவரையும் வழிபடவிடாமல் செய்து வந்தான் ..

இந்த இடத்தில் இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும் ... நமது ஸ்ரீரங்கநாராயண ஜீயர் பட்டத்தை அலங்கரித்து இருந்த “கூரநாராயண ஜீயர் “ சுவாமிகள் (இவர் மூன்றாம் குலத்துங்க சோழன் காலத்தே வாழ்ந்தவர் (1178-1218 AD) ) பலவித மந்திர கட்டுகளை நமது அரங்க மாநகருக்கு செய்து வைத்தவர் .. இவரது திருவுருவ சிலை நமது திருகொட்டாரத்தில் தூணில் உள்ளது ... இவர் ஸ்ரீரங்கத்திற்கு செய்த மந்திரபூர்வமன பணிகள் அளப்பிட முடியாது ..(தனியாக அதை எழுதுகிறேன் )


திருவரங்கத்தை சுற்றி நரசிம்ஹர் கோவில்களை நிறுவினார் ... காவேரி ஆற்றை மாற்றி அமைத்தார் (இது ஒரு irrigation engineering marvel )


சிறிது காலம் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே வாழ்ந்த சூல்தான் பிறகு பல நோய்களுக்கு உட்பட்ட அதற்கு ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மந்திர தன்மைகள் காரணம் என்று எண்ணி பயந்து ..சமயபுரம் அருகே தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு வாழ்ந்தான்..


துலுக்கர்கள் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கத்தில் அப்போது வசித்து வந்த சிங்கராயன்னும் பின்னர் அவரது புதல்வர் திருமணதூண் நம்பி என்போரும் அந்த துலுக்கனை சகாயம் பண்ணி அரங்கனை சிறிய அளவில் ஆராதிக்க அனுமதி பெற்று இருந்தனர் ..


இந்த காலத்தில் செஞ்சியில் நம்பெருமாள் இருப்பதை அறிந்த திருமனதூண்நம்பி .. உததமநம்பியை செஞ்சிக்கு அனுப்பி .. கண்ணனூரில் உள்ள சூல்தானின் படை பலம் மற்றும் பல்வேறு விசயங்களை எடுத்து சொல்லி .. கோபணார்யனை படை எடுத்து வரும் படி செய்தார் ..


தற்கால போஜிஸ்வரர் கோவிலில் ஒரு சிறு கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்த சூல்தானை வெல்ல விஜயநகர சாம்ராஜியத்தை நிறுவிய ஹரிரரின் மகனான விருப்பண்ண உடையாரின் தலைமையில்(பன்றிக்கொடி கொண்டு .. உலகை தாங்கிய வராக பெருமான் கொடி சின்னம் ஏந்தி ) ஒரு 70000 போர் வீரர்களுடன் கொபனார்யன் நம்பெருமாளையும் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு தற்கால மணச்சநல்லூர் மேற்கே உள்ள கோபுரப்பட்டி என்கிற ஊரில் நம்பெருமாளை நிலை படுத்தி மூன்று மாதங்கள் கடுமையான போர் நிகழ்த்தி ... எதிர்புறம் சுமார் 100000 பேர் கொண்ட (காக்கை சின்னக்கொடி ஏந்திய துலுக்கர் ) படையை வெல்ல உபயம் தினமும் அரங்கனை வேண்டி ... ஒரு தாசியை அனுப்பி அவள் மூலமாக அந்த சுல்தானை விஷம் வைத்து கொன்று ... அந்த படைகளை வென்று ...


அரங்கனை திருவரங்கத்தில் பெரியபெருமாளுடன் பிரதிஷ்டிப்பித்து ..

1341 ஆண்டு ஹோசாள மன்னனால் வெல்லமுடியாத அதே சுல்தான் படைகள் அரங்கன் “ரெங்கராஜனாக” தலைமைஏற்று வந்த போது தோல்வியுற்று .. தமிழகமெங்கும் அவர்கள் வேர் அறுக்கப்பட்டு ராமேஸ்வரம் வரை சென்று விருப்பண்ண உடையார் வெற்றிக்கொடியை நாட்டி தாம்பிரபரணி ஆற்றங்கரையில் தென் இந்தியாவில் எந்த ஒரு துலுக்கரும் இல்லை என்கிற செய்தியையும் ..பல கோவில்களை மறுபடி நிர்மாணம் பண்ணும் விதமாக ஒரு பெரிய விஜயஸ்தம்பம் கட்டு வைத்த செய்தியையும் அறிகிறோம் ..இவை அனைத்தும் சுமார் 1371-78 குள் நடைபெற்றன!!!


எங்கெல்லாம் சனாதன தர்மம் அழிகிறதோ அங்கெல்லாம் நான் வருவேன் என்று கீதையில் கண்ணன் சொன்ன வார்த்தையை உண்மையாக்கிய ஒரே தெய்வம் நமது அரங்கனே !! நாம் தென் இந்தியாவில் மட்டும் காணும் இவ்வளவு தேர்ச்சி பெற்ற கோவில்களும் ஆன்மீக ஸ்தலங்களும் அரங்கனின் கொடையே !!!


இன்னும் சில நூற்றாண்டுகள் கடந்து செல்வோம் ... காத்திருங்கள் !!!

அரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – பாகம் -1

$
0
0


அரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – பாகம் -1

இந்த காலகட்டத்தை அறிய நமக்கு இருக்கும் குறிப்புகள். கோவிலொழுகு மற்றும் சில கல்வெட்டு குறிப்புகள், மதுரா விஜயம் போன்ற இலக்கிய சுவடிகள்..

கோவிலொழுகு பல பதிப்புகள் காணப்படுகின்றன .. என்னிடம் இருக்கும் 1909 ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சென்னை அனந்த முத்திராக்ஷ்ர சாலை பதிப்பில் அரங்கன் உலா .. பிள்ளோகாசாரியர் தென்திசை அரங்கனை எழுந்தருளப்பண்ணி கொண்டு போன விசயம் இல்லாமல் துளுக்கநாச்சியாரிடம் டெல்லியில் இருந்த பிரவாபம் மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறது !! அங்கிருந்து திரும்பவும் வரும் வழியில் திருமலையில் இருந்ததாக சொல்லி இருக்கிறது ..

எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் பல பதிப்புகளை சோதித்து இதை இரண்டா பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என சாதித்துள்ளார்.. 1311 இல் முதலில் வந்த மாலிக்காபூர் படை எடுப்பின்போது டெல்லி சென்று விட்டு பின்னர் 1323 முகமது பின் துக்ளக் படை எடுப்பின்போது தென்னாடு விஜயத்தை அழகியமணவாளன் மேற்கொண்டார் என்று இதை பொருள் கொள்வதே சரி என்று எழுதி உள்ளார்... நாமும் அப்படியே செய்வோம் ..


1323 முகமது பின் துக்ளக் படையெடுப்பை “பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோவிலொழுகு குறிப்பிடுகிறது..

இன்றும் இந்த 12,000 பேருக்கு திதி கொடுக்கப்பட்ட இடமாக கோபுரப்பட்டி (திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமம் ) சிறு ஆறு காட்டப்படுகிறது !! இதை வரும் நாட்களில் பார்ப்போம் , மெல்ல நிறைய விசயங்களை எழுத ஆசை ..

இரண்டாம் முறை படையெடுத்து துலுக்கன் வருகிறான் என்கிற செய்தி கிடைத்த உடன் அரங்கனிடமே திருவுல சீட்டு கேட்டு ..தொடர்ந்து திருவிழா நடக்க திருஉள்ளம் சாதிக்க .. அழகியமணவாளனை கொள்ளிடக்கரை அருகே இருந்த பன்றி ஆழ்வான் கோவிலில் பலிவெட்டு மண்டபத்தில் எழுந்ததருளப்பண்ணி இருக்கையில் .. துலுக்கன் சமயபுரம் தாண்டி ஸ்ரீரங்கத்தின் உள்ளே நுழைந்த செய்தி கேட்டு .. பெருமாளை பக்தர்களுக்கு அறியாமல் பல்லக்கில் எழுந்தருளப்பண்ணி கொண்டு பிள்ளைலோகாச்சாரியார் மற்றும் பலர்  தென் திசை நோக்கி சென்றார்கள்.


முதல் முறை படை எடுத்து வந்த மாலிக்காபூர் கொள்ளை அடிக்க மட்டுமே வந்தான் ..அவன் ஆட்களை கொல்லவில்ல, படை வீரர்களையும்  விட்டுவிட்டும் செல்லவில்லை .. இரண்டாம் முறை வந்த துக்ளக் இரண்டும் செய்தான் ...




துக்ளக்கினால் விடப்பட்ட தளபதி சந்தன மண்டபத்தில் தங்கி இருந்து ஸ்ரீரங்கம் கோவில் தாசிகளால் சுகப்பட்டுக்கொண்டு அவர்களால் தடுக்கப்பட்டு மேலும் பல பெரும் சேதம் கோவிலுக்கு இல்லாமல் வசித்து வந்தான் ..


நாம் முன்னமே கண்ட படி கூரநாராயண ஜீயர் சுவாமிகள் செய்து வைத்த பல மந்தர கட்டுகளால் அவன் உடல்நலம் குன்றி ஸ்ரீரங்கத்தை விட்டு விலகி சமயபுரம் அருகே உள்ள போஜீஷ்வரர் கோவிலை இடித்து அதனை கொண்டு மாளிகை அமைத்து வாழ்ந்து வந்தான்.

அன்றைய தின கோவிலின் காணியாளன் சிங்கப்பிரான் என்கிற பிராமணர் தாசிகளின் துணை கொண்டு அரங்கன் கோவிலை பூஜிக்க அனுமதி அந்த தளபதியிடம் பெற்றனர்..

இந்த காலகட்டத்தில் திருவரங்க மாளிகையார் என்கிற திருமேனியை பண்ணி வைத்து அழகியமணவாளனுக்கு மாற்றாக பிரதிஷ்டை செய்தனர்.. திருவரங்க மாளிகையார் என்கிற இந்த மூர்த்தி மூலஸ்தானத்தில் பெரிய பெருமாள் திருவடி அருகில் வலது ஓரத்தில் இருப்பார்





அரங்கன் காணாமல் போன அந்த பன்றியாழ்வான் கோவிலை தேடி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன் .. அது ராமானுஜர் தினமும் குளிக்கும் தவாராசன் படித்துறை தெற்கே அமைந்தது என்று அறிந்து எனது ஆசான் கிருஷ்ணமாச்சரியரை பேட்டி கண்டேன் .. அதன் காணொளி .....

========================>>>>>>>>>>>>>


Video


<<<<<<<<<<<<<<<<<=================



ஸ்ரீரங்கத்தின் மக்கள் என்ன ஆனார்கள்? பாழ்பட்ட ஸ்ரீரங்கத்தை எப்படி பலர் புனர்நிர்மானிக்க உதவினார்கள் என்று பார்ப்போம் ..






Viewing all 19 articles
Browse latest View live